விழுப்புரம்: ஜெர்மனியில் வாழும் தமிழ் பெண் ஜோஸ்பின் ரம்யா. இவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அமைச்சர் கே. எஸ். மஸ்தானை டேக் செய்து உதவி கேட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனது தோழியின் சகோதரி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இறந்து விட்டதால், அவரின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அவசரமாக அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.