தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும்: சி.வி.சண்முகம் கோரிக்கை - விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகம் சிவிசண்முகம்

விழுப்புரம் : மாவட்டத்தில் அரசு பல்கலைக்கழகம் அமைக்குமாறு முதலைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Minister CV Shanmugam, அமைச்சர் சிவி சண்முகம், விழுப்பரம் பல்கலைக்கழகம் சிவி சண்முகம்
Govt University in Villupuram Minister CV Shanmugam

By

Published : Nov 27, 2019, 12:56 PM IST

விழுப்புரத்தில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி மற்றும் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலைக் கல்லூரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.துரைக்கண்ணு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சட்டக்கல்லூரி அமைத்துக் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

‘மாணவர்களின் தோழனாக இருங்கள்’ - ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு சட்டக்கல்லூரிகள் தந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு சிறந்த சட்ட வல்லுநர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழக்கறிஞர்களாகவும் வந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

விழுப்புரம் நகர வளர்ச்சிக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கி கொடுத்துள்ள முதலமைச்சருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

சி.வி. சண்முகம் பேச்சு

அதேபோல் விழுப்புரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, கல்வியில் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் வழங்கி விழுப்புரத்தை கல்வி நகரமாக உருவாக்கித் தந்துள்ள கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன்மூலம் பெண்களின் கல்விக் கனவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் ரூ. 1,500 கோடியில் உணவு பூங்கா, கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் ரூ. 1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்துள்ள வேளாண்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசு பல்கலைக்கழகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என வலியுறுத்தினார்.

34ஆவது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details