கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி வழக்கு விசாரணையில் அரசு சாட்சிகள் விசாரணை முடிந்த பின்னர் நீதிபதி புஷ்ப ராணி, வழக்கின் முக்கிய ஆவணங்களை எடுத்து வர நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அச்சமயம் முக்கிய கோப்புகள் காணவில்லை என நீதிமன்ற ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கோப்புகளை உடனடியாக கண்டுபிடிக்கும்படி நீதிபதி ஆணையிட்டார். பலமுறை தேடியும் கோப்புகள் கிடைக்காததால் நீதிமன்ற ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.