தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 3, 2021, 10:15 AM IST

ETV Bharat / state

10 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: லாரியுடன் பறிமுதல்செய்த காவல் துறை

திண்டிவனத்தில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை, லாரியுடன் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

ration rice  smuggling  ration rice smuggling  rice  villupuram news  villupuram latest news  lorry seized with ration rice  அரிசி கடத்தல்  கடத்தல்  ரேஷன் அரிசி கடத்தல்  திண்டிவனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்  விழுப்புரம் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தல்

விழுப்புரம்: திண்டிவனத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தனியார் உணவகத்துக்கு எதிரே நீண்ட நேரமாக லாரி ஒன்று நின்றுள்ளது.

மேலும் அந்த லாரி ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் நின்றுள்ளது. இதனால் காவல் துறையினர் சந்தேகத்துடன் லாரியில் சோதனை செய்துள்ளனர். அதில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் தற்கொலையை தடுக்க சிறப்பு ஆலோசனை மையம்

ABOUT THE AUTHOR

...view details