தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2019, 8:07 AM IST

ETV Bharat / state

ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான மடிக்கணினியை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு வழங்கினார்.

laptop

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1050 பேருக்கு, ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினியை சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு வழங்கினார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 786 மாணவர்களுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணிணி வழங்கப்பட்டது. மொத்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1786 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details