தமிழ்நாடு

tamil nadu

12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு! போலீஸ் வலைவீச்சு

By

Published : May 8, 2019, 1:38 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் செல்லும் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கிவரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப். 28ஆம் தேதியன்று அரசுப் பேருந்து உட்பட நான்கு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திரும்பவும் ஒரு அரசுப் பேருந்து உட்பட ஐந்து பேருந்துகளின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரபாகரன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை 12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

ABOUT THE AUTHOR

...view details