திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ ஆறடி வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
இச்சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கருணாநிதி, அண்ணாவின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி கலைஞர் அறிவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.