சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக இச்செயல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கி, பதிவாளரை நியமிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
பதிவாளரின் செயல் சட்டத்தை மீறியது
அதில், ”டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அதிமுக அரசால் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் தற்போதைய அரசின் புறக்கணிப்பால், பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்பட்டுவருகின்றது. பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.