விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவனது மனைவி சிவலட்சுமி (36). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சட்டவிரோத கருக்கலைப்பு: ஓய்வு பெற்ற செவிலி வீட்டிற்கு சீல் - சட்டவிரோத கருக்கலைப்பு
விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலி வீட்டுக்கு சுகாதாரத் துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
![சட்டவிரோத கருக்கலைப்பு: ஓய்வு பெற்ற செவிலி வீட்டிற்கு சீல் Illegal abortion held in Villupuram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:21-tn-vpm-03-ret-nurse-house-seal-scr-7205809-05062020181246-0506f-1591360966-1029.jpg)
இதற்கிடையில் சிவலட்சுமி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். நான்கு மாத கர்ப்பம் என்பதால் கருவை கலைக்க முடிவு செய்து, அரகண்டநல்லூரில் உள்ள ஓய்வுபெற்ற செவிலி முருகேசனின் மனைவி ராஜாமணி வீட்டிற்கு ஜூன் மூன்றாம் தேதி சென்று கருக்கலைப்பு செய்தனர்.
இதில் சிவலட்சுமி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சண்முககனி குழுவினர் இன்று நேரில் சென்று ராஜாமணி வீட்டில் ஆய்வு செய்தபோது கரு கலைப்பு செய்தது உறுதியானது. இதனையடுத்து செவிலி ராஜாமணி வீட்டிற்கு சீல் வைத்த சுகாதாரத் துறையினர், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.