தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 11, 2020, 12:47 AM IST

ETV Bharat / state

குண்டர் சட்டம்! சாராய வியாபாரி கைது

விழுப்புரம்: வேட்டவலம் அருகே பிரபல சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சாராய வியாபாரி கைது
சாராய வியாபாரி கைது

விழுப்புரம் மாவட்டம் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (34). இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். ஏற்கனவே சத்தியராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

எனவே, இவரது நடவடிக்கை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை குண்டர் சட்டத்தில் சத்தியராஜை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில் நேற்று (ஜூலை10) காவல் துறையினர் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details