தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2021, 5:34 PM IST

ETV Bharat / state

தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக

தமிழ்நாட்டில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் படங்கள் அச்சிடப்பட்ட 5 கிலோ அரிசி பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

gingee mla violates election rules and distribute rice bags
gingee mla violates election rules and distribute rice bags

விழுப்புரம்: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான் சார்பில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் படங்கள் அச்சிடப்பட்ட ஐந்து கிலோ அரிசி பை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக

இதனையடுத்து, வட்டாச்சியர் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், உதயத்தூர் கிராமத்தில் உள்ள திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இரவு நேரத்தில் மக்களுக்கு விநியோகம செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ அளவிலான 44 அரிசி பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details