விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்காகவும், மாணவர்களின் நலன் கருதியும், கடந்த அதிமுக ஆட்சியில், பிப்., 25ஆம் தேதி விழுப்புரம் திரு.வி.க.,வீதியில் டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் தொடங்கப்பட்டது.
தற்போது உயர்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பெயரில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலை., முடக்க திட்டம்
இந்த விவகாரம் குறித்து முன்னாள சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்காக அண்ணா புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், உயர் கல்வி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தன்னிச்சையான அறிவிப்புகளை அறிவித்து மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசும், உயர்கல்வித்துறை செயலாளரும் செயல்படுகிறார்கள்.