தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2021, 2:45 PM IST

ETV Bharat / state

சாலை விபத்தில் மனைவி கண்முன்னே உயிரிழந்த விவசாயி!

விழுப்புரம்: நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்துச் சென்ற விவசாயி, தக்காளி லோடு ஏற்றிவந்த சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

farmer-killed-in-road-accident
farmer-killed-in-road-accident

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஈச்சூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவர் தனது மனைவியுடன் விளை நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக இன்று (பிப்.17) அதிகாலை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.

மேல்களவாய் பகுதி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிவந்த விவசாயி கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விவசாயின் மனைவி காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து அருகிலிருந்தவர்கள் செஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயங்களுடன் உயிர்தப்பிய விவசாயின் மனைவிக்கு செஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சரக்கு வாகனத்தின் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மனைவியின் கண்முன்னே கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் பதுக்கிவைத்த 400 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details