தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2021, 4:51 PM IST

ETV Bharat / state

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை

உயர் மின் கோபுரம் அமைத்ததற்கு இழப்பீடு தராததால் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி தற்கொலை
விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அண்ணமங்கலம் அடுத்துள்ளது, கலிங்கமலை. இந்தப் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயி மணி (55) என்பவருக்குச் சொந்தமான 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மொத்தமே 60 சென்ட் நிலம் மட்டுமே இருந்துள்ளது. அதிலும் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால், அவர் விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

சாவுக்குக் காரணமான மின் கோபுரம்

இந்நிலையில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட மணி, தனியார் ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் காணப்பட்ட மணி, அவரது நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

இதன் காரணமாக அவரது உறவினர்கள் செஞ்சி வேலூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், உயர் மின் கோபுரத்திலிருந்து மணியின் உடலை கீழே இறக்கினர். பிறகு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக உடல் கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த விவசாயி மணிக்கு மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க:பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details