போலி காவலர் சிறையில் அடைப்பு! - Arrested
விழுப்புரம்: புதிய பேருந்து நிலையம் அருகே போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![போலி காவலர் சிறையில் அடைப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3967332-728-3967332-1564283154300.jpg)
Police
விழுப்புரம் அருகேயுள்ள கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் படையப்பா என்கிற சிவா. பட்டதாரி இளைஞரான இவர் நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று-கொண்டிருந்தார்.
இவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பேருந்து நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர் தன்னை காவலர் என்றும் ஆயுதப் படையில் பணிபுரிந்துவருவதாகவும் கூறியுள்ளார்.