தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும்' - புதிய டிஐஜி எழிலரசன் - விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன்

விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்தைக் குற்றமில்லாமல் மாற்றுவதே தனது முதல் லட்சியம் என்று கூறிய புதிய டிஐஜி எழிலரசன் தனது செயல்களே பேசும் என்று தெரிவித்துள்ளார்.

elizharasan taking charge as villupuram dig
ezhilarasan dig

By

Published : Jul 2, 2020, 2:55 PM IST

விழுப்புரம் சரக டிஐஜியாக இருந்த சந்தோஷ்குமார் பதவி உயர்வுபெற்று சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அந்தப் பொறுப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன், "கரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே எனது முதல்பணி. சட்டம்-ஒழுங்கைச் சிறப்பாகச் செயல்படுத்தி காட்டுவதே எனது தலையாய கடமை.

விழுப்புரம் காவல் சரகத்தை குற்றமில்லாமல் மாற்றுவதே எனது லட்சியம். நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும். பொதுமக்களின் குறைகளைக் களைய எனது அலுவலகக் கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details