தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும்' - புதிய டிஐஜி எழிலரசன்

விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்தைக் குற்றமில்லாமல் மாற்றுவதே தனது முதல் லட்சியம் என்று கூறிய புதிய டிஐஜி எழிலரசன் தனது செயல்களே பேசும் என்று தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 2, 2020, 2:55 PM IST

elizharasan taking charge as villupuram dig
ezhilarasan dig

விழுப்புரம் சரக டிஐஜியாக இருந்த சந்தோஷ்குமார் பதவி உயர்வுபெற்று சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அந்தப் பொறுப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன், "கரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே எனது முதல்பணி. சட்டம்-ஒழுங்கைச் சிறப்பாகச் செயல்படுத்தி காட்டுவதே எனது தலையாய கடமை.

விழுப்புரம் காவல் சரகத்தை குற்றமில்லாமல் மாற்றுவதே எனது லட்சியம். நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும். பொதுமக்களின் குறைகளைக் களைய எனது அலுவலகக் கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details