தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன் டெபாசிட் இழப்பார் -  ராமதாஸ் - ElEction campaign

விழுப்புரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் டெபாசிட் இழப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ்

By

Published : Apr 2, 2019, 9:10 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் வடிவேல் ராவணணை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் பரப்புரையின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது

விழுப்புரம் தியாகிகள் வாழ்ந்த மாவட்டம். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை இழந்த புண்ணிய பூமி. பாமக போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் உரிமை கொண்டாடுகிறார். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக நானும், லட்சக்கணக்கான பாமக தொண்டர்களும் சிறை சென்றுள்ளோம். திமுக அராஜகம் செய்யும் கட்சி. அவர்களுக்கு நாகரீகம் என்பதே கிடையாது. மாலை போட்டு கழுத்தை அறுப்பவர்கள்.

விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் முகமுடி அணிந்து போட்டியிடுகிறார். திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைக்கும் போது, இவருக்கு தோண்டி சின்னம் கூட கிடைக்கவில்லையா?. சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் டெபாசிட் இழப்பார். தமிழக மக்களும், இளைஞர்களும் விழிப்புடன் உள்ளனர்.

திமுகவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details