தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைச்சர் சி.வி. சண்முகம் இரட்டைக் கொலையை மறைக்க சூழ்ச்சி செய்கிறார்' - க. பொன்முடி - K. ponmudy dmk mla

விழுப்புரம்: சாத்தான்குளம் விவகாரத்தை மறைக்க அமைச்சர் சி.வி. சண்முகம் சூழ்ச்சி செய்வதாக திமுக எம்எல்ஏ க. பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

DMK MLA Ponmudy
DMK MLA Ponmudy

By

Published : Jul 2, 2020, 7:07 PM IST

சாத்தான்குளம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கடும் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. நேற்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இவ்விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாகக் கூறி கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஜெயராஜும் பென்னிக்ஸும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இதயமற்று கூறும் அமைச்சர் சி.வி. சண்முகம், ஸ்டாலினை அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உயர் நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் கைதுசெய்யப்பட்டும், இது வழக்கமான லாக்அப் மரணம் போல அல்ல என்று மனசாட்சியில்லாமல் அவர் கூறுகிறார். இது அவருடைய கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம். உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் வரை வாய் திறக்காமல், எங்கே போனார் இந்த சண்முகம்? ஸ்டாலினைக் குற்றஞ்சாட்டும் அமைச்சர், கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறியதை ஏன் மறைக்கிறார்? கொலையிலும் கண்துடைப்பு நாடகம் போடுவது கொடிய குற்றமல்லவா?

இதன்மூலம் இருவரின் மரணத்தையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். இதையனைத்தையும் பார்க்கையில் இரட்டைக் கொலையை மறைக்கச் சூழ்ச்சி செய்யும் கேடுகெட்ட யுக்திதான் அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கையின் வெளிப்பாடு. சம்பந்தபட்ட காவலர்களைக் கைதுசெய்யாமல், அவர்களுக்கு வேறு இடத்தில் பணி வழங்கி சூழ்ச்சி செய்யும் அமைச்சரும் அவரது முதலமைச்சரும், ஸ்டாலினை சூழ்ச்சி செய்வதாகக் கூறுவது நியாயமற்றது.

பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு, தருமபுரி மாணவிகளை எரித்துக் கொன்றவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது, ஐஏஎஸ் அலுவலர் என்றும் பாராமல் சந்திரலேகா மீது ஆசிட் வீசியது என பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறியது அதிமுக ஆட்சியில்தான்.

நெறி சார்ந்த அரசியலுக்குத் துளியும் இலக்கணம் அல்லாத அமைச்சர் சண்முகம், ஸ்டாலின் நெறி சார்ந்த அரசியலைக் கேள்வி கேட்கத் துளியும் தகுதியில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திமுக என்பது கொலைகளின் கூடாரம்: அமைச்சர் சிவி சண்முகம் ஷாக் ரிப்போர்ட்

ABOUT THE AUTHOR

...view details