விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "ஆளுநரிடம் ஊழல் குற்றச்சாட்டை தெரிவிப்பது முறை. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகூட தெரியாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருகிறார்.
திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெறவில்லை.
அதிமுக, பாஜக கட்சியினர் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றனர்.