தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2020, 12:47 PM IST

ETV Bharat / state

கூலித்தொழிலாளிக்கு கரோனா தொற்று

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆவுடையார்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று
கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரையில் 50 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆவுடையார்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் (50) என்பவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது. இவர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் அலுவலர்கள் செய்வதறியாவது திகைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: 'பெட்ரோல் வாங்கக்கூட காசு இல்லை'- தக்காளியை கால்வாயில் கொட்டிய விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details