தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 20, 2020, 2:41 PM IST

ETV Bharat / state

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைப்பு!

விழுப்புரம்: 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இன்று தொடங்கிவைத்தார்.

விழுப்புரம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி  விழுப்புரம் மாவட்டச் செய்திகள்  சாலை வார விழா  விழுப்புரம் 31ஆவது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி  road awarness rally in villupuram
விழிப்புணர்வ பேரணியை தெடாங்கி வைத்த ஆட்சியர்

ஆண்டுதோறும் அரசு சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் விழுப்புரத்தில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா இன்று முதல் வருகின்ற 27ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முதற்கட்டமாக இன்று, ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

விழிப்புணர்வு பேரணியை தெடாங்கி வைத்த ஆட்சியர்

தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். அதில், சாலை பாதுகப்பு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் மற்றும் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: 'மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்' - போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details