தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 10:42 PM IST

ETV Bharat / state

விழுப்புரத்தில் வேகமெடுக்கும் ஊரடங்கு உத்தரவு மீறல் வழக்குகள்!

விழுப்புரம்: 144 தடை உத்தரவை மீறியதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு மீறல்
ஊரடங்கு மீறல்

கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று ( ஜூலை 13) மட்டும் 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 144 ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று (ஜூலை 13) வரை 30 ஆயிரத்து 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 ஆயிரத்து 779 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களிடமிருந்து 16 ஆயிரத்து 292 இருசக்கர வாகனங்கள், 389 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 639 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details