தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2020, 9:45 AM IST

ETV Bharat / state

லஞ்ச வழக்கு! மின்வாரிய அலுவலர்களுக்கு சிறை

விழுப்புரம்: மின் இணைப்பை மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் மின் ஊழியர்கள் இருவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

லஞ்ச வழக்கு! மின்வாரிய அலுவலர்களுக்கு சிறை
லஞ்ச வழக்கு! மின்வாரிய அலுவலர்களுக்கு சிறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தனபால். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நிலத்தில் இருந்த மின் இணைப்பை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறு தடயம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக தனபாலிடம் ரூ.3500ஐ மின்வாரிய ஊழியர்கள் குபேந்திரன், விஜயகுமார் ஆகியோர் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து தனபால் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார்.

பின்னர் ஊழல் தடுப்பு அலுவலரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மின்வாரிய ஊழியர்களிடம் தனபால் லஞ்சமாக வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஊழல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், விஜயகுமார், குபேந்திரன் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதுத்தொடர்பான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குபேந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஜயகுமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: வீடியோ: உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு லஞ்சம் பெற்ற ஊழியர்

ABOUT THE AUTHOR

...view details