தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து; ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு - ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து

விழுப்புரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி
பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி

By

Published : Dec 3, 2021, 5:15 PM IST

விழுப்புரம்: பானாம்பட்டு பாதை ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் அர்ச்சுனன் (28). நேற்றிரவு (டிச.3) அர்ச்சுனன் விழுப்புரம் பகுதியில் இருந்து பானாம்பட்டு ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் அர்ச்சுனன் பேருந்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தார். உடனே சக ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து ஓட்டுநரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

பேருந்து மோதி விபத்து

அச்சம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அருகில் உள்ள விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து பேருந்துக்கு தீவைத்தனர்.

பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு துறையினர் ஆகியோர் உடனடியாக பேருந்து மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இறந்தவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

இச்சம்பவத்தால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் தொடரும் தொழிலதிபர்கள் கடத்தல்: பெண் வெளியிட்ட வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details