தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தோணியர் சிலை உடைப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள் - Latest villupuram news

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே கிறிஸ்துவ ஆலயத்தில் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

விழுப்புரம் பொதுமக்கள்
விழுப்புரம் பொதுமக்கள்

By

Published : Jun 22, 2020, 5:15 PM IST

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அமைந்துள்ள ஆற்காடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அங்கு சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியர் சிலையை கடந்த 19ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் உடனடியாக அப்பகுதியினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், "அங்கு டாஸ்மாக் கடைக்கு வரும் நபர்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே, அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் சிலையை சேதப்படுத்திய நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details