விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, அமைச்சர் சி.வி. சண்முகம் விக்கிரவண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, விக்கிரவண்டி பேரூராட்சி ஆறாவது வார்டுக்குள்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.