தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களின் குறைகளைக் கேட்கக்கூட நேரம் இல்லையா? - புலம்பும் விக்கிரவாண்டிவாசிகள் - viluppuram election news update

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

minister c.v.shanmugam

By

Published : Oct 11, 2019, 9:57 AM IST

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, அமைச்சர் சி.வி. சண்முகம் விக்கிரவண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, விக்கிரவண்டி பேரூராட்சி ஆறாவது வார்டுக்குள்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பான மனு ஒன்றை சி.வி சண்முகத்திடம் அளித்தனர். மக்களின் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சி.வி. சண்முகம், உங்கள் பகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் யார்? என்று பொதுமக்களை நோக்கி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

மக்களை மிரட்டும் அமைச்சர் சி.வி. சண்முகம்

இதனையடுத்து, பொதுமக்களிடம் வாங்கிய மனுவை வாங்கி மடித்து வைத்து விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி சென்றார். அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுமக்களிடம் ஆவேசப்பட்டு கேள்வி கேட்கும் காணொலிக் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details