தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Heavy Rain: குளம் போல் காட்சியளிக்கும் பள்ளி - மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம்

விழுப்புரத்தில் நகராட்சி உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் (Rain Water)குளம் போல் தேங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சீர்செய்து தருமாறு மாணவ மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சி உயர்நிலைப் பள்ளி
குளம் போல் காட்சியளிக்கும் பள்ளி

By

Published : Nov 15, 2021, 6:18 PM IST

விழுப்புரம்: பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர் நிலைப் பள்ளியில், கரோனா ஊரடங்கிற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து, இன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் மாணவ- மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல வேண்டுமெனில், இந்த மழைநீரை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

அச்சத்தில் பெற்றோர்

தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ள சூழலில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப அவர்களின் பெற்றோர் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை மின்மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதையும் படிங்க:கனமழை: கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details