தமிழ்நாடு

tamil nadu

திண்டிவனத்தில் பெண் கழுத்தறுத்து படுகொலை!

By

Published : Sep 8, 2020, 7:02 AM IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A Women Mudered In Thindivanam
A Women Mudered In Thindivanam

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கன்னியம்மாள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கன்னியம்மாள் விழுக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்துவந்தார்.

இந்நிலையில், நேற்று காலை கன்னியம்மாள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து திண்டிவனம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கன்னியம்மாள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details