தமிழ்நாடு

tamil nadu

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...முதியவர் மீது பாய்ந்தது போக்சோ...

By

Published : Jul 20, 2022, 3:23 PM IST

விழுப்புரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

sexual harassment case  75 years old arrested in pocso  75 years old arrested in pocso in villupuram  villupuram news  villupuram latest news  13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  பாலியல் தொல்லை  சிறுமிக்கு பாலியல் தொல்லை  விழுப்புரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

விழுப்புரம்:சிந்தேரிக்கரையை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று (ஜூலை 19) தன் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு உள்ளாடை சோதனை - 5 பெண்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details