தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் ரூபாய் 7 லட்சம் பறிமுதல்! - Election Flying Corps

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 7 லட்ச ரூபாய் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் ரூபாய் 7 லட்சம் பறிமுதல்
விழுப்புரத்தில் ரூபாய் 7 லட்சம் பறிமுதல்

By

Published : Mar 3, 2021, 2:26 PM IST

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் முருகன் தலைமையிலான குழுவினர் கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கூட்டுச்சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.7 லட்சம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டபோது அவர், விழுப்புரம் பூந்தமல்லி தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் முத்து (72) என்பதும், தனது சொந்த வேலைக்காக புதுச்சேரிக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது.

ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் அதனை வானூர் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் வானூர் கணக்கு கருவூலத்துறையிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: ஆறாம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை அறிவித்த ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details