தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'லேப்டாப் வாங்க சேர்த்து வைத்த பணம்' - முதலமைச்சருக்கு அள்ளிக்கொடுத்த மாணவி - Villupuram student Sindhuja

விழுப்புரம்: மடிக்கணினி வாங்க தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1,500 ரூபாயை 5ஆம் வகுப்பு மாணவி முதலமைச்சரின் கரோனா நிதிக்கு வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.

5th grade student funded by Corona
5th grade student funded by Corona

By

Published : May 12, 2021, 10:57 PM IST

விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கணேசன்- தமிழ்ச்செல்வி தம்பதி. இவர்களது மகள் சிந்துஜா, அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் பணம் சேர்த்து வருகிறார். சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2ஆவது பரிசாக 500 ரூபாய் பரிசுத்தொகை பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார்.

தற்போது கரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருவதால், நோய் பாதிப்புகள் குறைய தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.

எனவே, தான் ஆசையாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த கணேசன், உண்டியலை உடைத்து அதில் இருந்த ஆயிரத்து 500 ரூபாயை வங்கியில் கொடுத்து வரைவோலையாக மாற்றினார். பின்னர், அதனை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார். மாணவியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details