தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மதுபானம் தயாரித்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - illegal liquor sellers arrested goondas act

விழுப்புரம் மாவட்டத்தில் போலி மதுபானம் தயாரித்த ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

5 illegal liquor sellers arrested goondas act in villupuram
5 illegal liquor sellers arrested goondas act in villupuram

By

Published : Sep 18, 2020, 5:45 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தென்பசியார் ஏரிக்கரை பகுதியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கடந்த மாதம் 21ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த 120 லிட்டர் எரிசாராயம், போலி மதுபானம் நிரப்பி வைத்திருந்த 180 மில்லி கொள்ளளவு கொண்ட இரண்டாயிரத்து 100 பாட்டில்கள், 550 காலி பாட்டில்கள், ஆயிரத்து 500 போலி ஸ்டிக்கர்கள், மூடிகள், இயந்திரங்கள், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு பேரல்கள், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏழு கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக, கேணிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (42), ஆனந்தபாபு (32), நாராயணன் (35), தென்பசியார் பகுதியை சேர்ந்த அன்பு (26), வீரப்பன்(35) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்கள் ஐந்து பேரும் இன்று (செப் 18) மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: போலி மதுபானங்கள் தயார் செய்த இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details