தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு - Female child killed in foot mishap

விழுப்புரம் அருகே நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

By

Published : Feb 20, 2022, 10:03 PM IST

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரத்தின் பொம்மையார் பாளையம் கிராமத்தில் உள்ள தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றபோது, தனது நான்கு வயது மகள் ரூபிஷேரிங்கையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை விட்டுவிட்டு அருணகிரி கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அருணகிரி அக்கம்பக்கத்தினருடன் இணைந்து குழந்தையை தேடியுள்ளார்.

அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் குழந்தை மூழ்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. குழந்தை உயிரிழப்பு குறித்து கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details