தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதனைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பயிற்சி காவலர், போக்குவரத்து காவலர், பொதுமக்கள் உள்ளிட்ட 109 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.