வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் நதிவாணன் (26), தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், நேற்று மதுபோதையில் தனது வீட்டுக்குச் சென்ற நதிவாணனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான நதிவாணன் வீட்டிலிருந்த கண்ணாடிப் பொருள்களை உடைத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் உடனடியாக ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். நதிவாணனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.