தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர் கண்டிப்பு - கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர் - A young man who chops off his parents

வேலூர்: பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் மதுபோதையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suicide attempt
suicide attempt

By

Published : Jan 4, 2020, 9:43 AM IST

Updated : Jan 4, 2020, 10:11 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் நதிவாணன் (26), தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், நேற்று மதுபோதையில் தனது வீட்டுக்குச் சென்ற நதிவாணனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

suicide attempt

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான நதிவாணன் வீட்டிலிருந்த கண்ணாடிப் பொருள்களை உடைத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் உடனடியாக ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். நதிவாணனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது அங்கு நதிவாணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: உடல்நலம் பேன உடற்பயிற்சி அவசியம்!

Last Updated : Jan 4, 2020, 10:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details