தமிழ்நாடு

tamil nadu

கிருமிநாசினி, முகக்கவசம் - அதிக விலைக்கு விற்றால் சீல்

By

Published : Mar 21, 2020, 9:13 AM IST

வேலூர்: கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடைக்குச் சீல்வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

vellore-collecter
vellore-collecter

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூரில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் முகக்கவசம் வழங்கவதற்காக, அதனைத் தயாரிக்க பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. அப்படி வேலூரில் உள்ள வெல்மா மகளிர் சுய உதவிக்குழு மையத்தில் நடைபெற்றுவரும் அந்தப் பணியினை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வுசெய்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனாவால் முகக்கவசம், கிருமிநாசினி, சானிடைசர் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிகட்டவும், குறைந்த விலையில் முகக்கவசம் வழங்கவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்

அதன்மூலம் நாளொன்றுக்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக்கவசம் தயாரிக்கப்படும். அதனை வெல்மா விற்பனை நிலையங்கள், நியாய விலைகடைகளில் ரூ.10-க்கு மக்கள் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

கிருமிநாசினி ரூ.120-க்கு குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அதிகவிலைக்கு விற்றால் அக்கடைக்கு சீல்வைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ்: பெட்ரோல் பங்கில் இலவச முகக்கவசம்

ABOUT THE AUTHOR

...view details