வேலூர் மாவட்டம் லத்தேரி, சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மகள் நிவேதினி குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார்.
ஆசிரியர்கள் மாணவியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற நிவேதினியின் பெற்றோர்கள் மகள் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நிவேதினியின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் நிவேதினிக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் எனவும், சம்பவத்தன்று அதிகளவில் வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.