பெங்களூர் கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த நடராஜன், அவரது மனைவி உமாதேவியுடன் நேற்று இரவு 9.15 மணிக்கு சென்னையிலிருந்து காவேரி விரைவு ரயிலில் பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார். இந்த ரயில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் பகுதியில் நள்ளிரவு 12.50 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது உமாதேவி கழிவறை செல்வதற்காக தூக்க கலக்கத்தில் எழுந்து வந்துள்ளார்.
அப்போது தூக்க கலக்கத்தில் கழிவறை கதவினை திறப்பதாக நினைத்து பயணிகள் ஏறும் படிகட்டின் கதவினை திறந்துள்ளார். இதில் நிலை தடுமாறிய உமாதேவி ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.