தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 29, 2022, 4:08 PM IST

ETV Bharat / state

பெங்களூரு - சென்னை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

வேலூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி: 3 பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி: 3 பேர் படுகாயம்

வேலூர்: விரிஞ்சிபுரம் அருகே பொய்கை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியினில் மோதி விபத்துக்குள்ளானது.

எதிர் திசையில் கவிழ்ந்த இந்த லாரியில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி: 3 பேர் படுகாயம்

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதையும் படிங்க: பேருந்தை ஓட்டி சென்ற எம்எல்ஏ...கியர் போட்ட ஓட்டுனர்

ABOUT THE AUTHOR

...view details