தமிழ்நாடு

tamil nadu

ஊராட்சிகள் உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு!

By

Published : Nov 7, 2020, 4:21 PM IST

வேலூர்: ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் பணியாற்றிவரும் உதவி இயக்குநர் முறைகேடாக பணம் பெற்றதால், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு
உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்கு மகளிர் திட்டம் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

இங்கு ஊராட்சிகள் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் செந்தில்வேல் (50). இவர் தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறைகேடாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், நேற்று (நவ. 6) மாலை செந்தில்வேலின் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்ற போது, அவர் தனது பணிகளை முடித்து விட்டு காரில் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள், செந்தில்வேலை வழிமறித்து அவரது அலுவலகத்தில் சோதனை செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தனர். பின்னர் அங்கு நடத்திய சோதனையில் ரூ. 92 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது உதவி இயக்குநர் செந்தில்வேல் மீது லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை - ரூ. 92 ஆயிரம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details