தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - vellore Youth murder

வேலூர்: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

By

Published : Jan 14, 2020, 4:11 PM IST


வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(22). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டைக்கு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது ஐயப்பனை அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் திடீரென கீழே தள்ளி கத்தி, கல்லை கொண்டு தாக்கிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சடத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

முதற்கட்ட விசாரணையில் சைதாப்பேட்டை பகுதியில் இரவில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், அப்போது மது வாங்க வந்தவருக்கும் ஐயப்பனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்தள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரண மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பகைக்கு வயது ஒன்று' - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

ABOUT THE AUTHOR

...view details