தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2019, 2:13 PM IST

ETV Bharat / state

2 ஏடி.எம்.களில் கொள்ளை முயற்சி: கொள்ளையர்களுக்கு காவல் துறை வலைவீச்சு

வேலூர்: வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து இரண்டு ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

ATM robbery attempt

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் நம்பர் 1 வங்கி, தெக்குபட்டு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி

கொள்ளைச் சம்பவங்களை மறைக்க மிளகாய்ப்பொடி தூவி அருகிலுள்ள சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்துவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

காவல் துறையினர் அடுத்தடுத்து இரண்டு சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திவருகின்றனர்.

இதையும் படிக்க: மதுரை விமான நிலையத்தில் 350 கிராம் தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details