இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று (செப்.13) நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்) 15 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் மொத்தம் 8 ஆயிரத்து 370 மாணவ - மாணவிகள் தேர்வெழுத இருந்த நிலையில் 6 ஆயிரத்து 958 பேர் என 83.1 விழுக்காடு மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.1,412 பேர் 16.9 விழுக்காடு நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1.4 விழுக்காடு மாணவர்கள் அதிகம் வருகை புரிந்துள்ளனர். திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வெழுத விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 625 பேர்.