தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உ.பி.யில் சிக்கித் தவிக்கும் வேலூர் வாசிகளை சொந்தவூருக்கு அனுப்புங்கள் - கதிர் ஆனந்த் கடிதம் - VELLORE mp kathiranand letter

வேலூர் : உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் வேலூர் வாசிகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் க் கடிதம் எழுதியுள்ளார்.

vellore
vellore

By

Published : May 8, 2020, 12:31 AM IST

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநிலத் தலைமைச் செயலர், தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் எழுதியுள்ள கடிதத்தில், "ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் அந்த மாநிலத்திலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.
தற்போது அவர்கள் லக்னோ சார்பாங் ரயில் நிலையத்தில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே, லக்னோவில் சிக்கியுள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 'மாநிலத்தின் நிதி நிலை பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details