தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரியில் பொங்கல் விழா - மாணவிகள் கொண்டாட்டம் - மாணவிகள் மாட்டு வண்டி பயணம்

வேலூர்: வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் மாணவிகள் மாட்டு வண்டிப் பயணம் செய்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

pongal celebration
Vellore girls collage pongal celebration

By

Published : Jan 13, 2020, 7:40 AM IST

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதற்காக புத்தாடை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பாகக் கொண்டாடினர். பின்னர் அங்கு அலங்கரித்து கொண்டுவரப்பட்ட காளைகளுக்கு பூஜை செய்த மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய மாணவிகள்

பின்னர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டு வண்டிப் பயணம், ராட்டினம், கயிறு இழுக்கும் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக பொங்கலைக் கொண்டாடினர்.

கிராமப்புறங்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடுவது போல தனது நண்பர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.

இதையும் படிங்க: கரையான்களிடம் இருந்து மரங்களைக் காக்க பூசப்பட்ட சுண்ணாம்பு

ABOUT THE AUTHOR

...view details