தமிழ்நாடு

tamil nadu

’புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும்’ - வேலூர் மாவட்ட ஆட்சியர்

By

Published : Nov 9, 2019, 11:43 PM IST

வேலூர்: புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ. 46 கோடியில் புதுப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வணிகர்கள், வாகன உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திமுக தரப்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடிய கிரீன் சர்க்கிள் போக்குவரத்து நெருக்கடிப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் பேட்டி

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு ஒரு சில சமயத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விபத்தைத் தடுக்கவும் ஒரு சில முடிவுகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கவிருக்கிறது. பணிகள் தொடங்குவதற்கு முன்பு தற்காலிக பேருந்து நிலையங்கள் எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details