தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு கடைகளில் பாதுகாப்பு நடைமுறை - ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு - லத்தேரியில் புதிய தீயணைப்பு நிலையம்

பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

vellore collector shanmuga sundrum
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம்

By

Published : Apr 18, 2021, 9:11 PM IST

Updated : Apr 18, 2021, 9:45 PM IST

வேலூர்: காட்பாடியை அடுத்த லத்தேரியில் இன்று ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தைத் தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்டத்தின் அனைத்து வருவாய், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கும் கீழ்கண்ட வழிமுறைகளை வழங்கி உள்ளார்.

அவை பின்வருமாறு:

  1. அனைத்து பட்டாசு கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும்.
  2. அனைத்து தீ பாதுகாப்பு விதிமுறைகளும், உரிமம் சார்ந்த நிபந்தனைகளும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
  3. குழந்தைகள் மற்றும் கடை சாராத நபர்களை பட்டாசு கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது.
  4. பட்டாசு கடைக்கான உரிமம் வைத்திருப்பவர்கள் ஜூலை 30ஆம் தேதி (கோடை காலம் முடிவடையும் வரை) வரை புதிதாக பட்டாசுகள் கொள்முதல் செய்யக்கூடாது. தற்போது கையில் இருக்கக்கூடிய இருப்புகளை மட்டும் விற்பனை செய்து கொள்ள வேண்டும்‌.
  5. இருப்பில் இருக்கும் பட்டாசுகளில் அதிகமான சேதத்தை ஏற்படுத்த கூடியவற்றை கடையில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.
  6. மின் கம்பங்களை மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
  7. காவல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் இணைந்து நாளை முதல் அனைத்து பட்டாசு கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  8. கிராமம்/ நகரத்தின் மத்தியில் உள்ள பட்டாசு கடைகளை புறநகர் பகுதிகளில் மாற்ற ஆவண செய்ய வேண்டும்.
  9. பட்டாசு கடைகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் செல்ல கூடிய அளவிற்கு போதிய அகலம் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
  10. இவை அனைத்தையும் சரி பார்த்து வரும் வெள்ளிக்கிழமைக்குள்(ஏப்ரல். 23) அந்தந்த கோட்டாட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டாசு கடை உரிமம் வைத்துள்ளவர்களுக்கான கூட்டம் நடைபெறும். அதில் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி(மாநகராட்சி), மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மின்சாரத் துறையின் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, லத்தேரி அல்லது கே.வி. குப்பத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் (Fire Service Station) அமைக்க மே. 04ஆம் தேதிக்குள் முன்மொழிதல் (Proposal) அனுப்பப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பட்டாசு கடையில் தீ விபத்து: மூவர் உயிரிழப்பு!

Last Updated : Apr 18, 2021, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details