வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளியான கலைவாணி மனநலம் பாதிக்கப்பட்டவர். இதுவரை மாற்றுத்திறனாளி சான்றிதழோ, அரசு உதவித்தொகையோ பெறாதவர். இதுவரையிலும் இவரது தாயாரின் முதியோர் உதவித் தொகையான மாதம் ஆயிரம் ரூபாயைக் கொண்டே செலவுகளைச் சமாளித்துவந்தனர். இந்நிலையில் தனது தாயாருக்கும் உடல்நிலை சரியில்லாததால் உணவுக்கே அவதிப்பட்டுவந்துள்ளார்.
இது குறித்த தகவல் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்குத் தெரியவர, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய்பெறுவதற்கும், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியின்கீழ் 15 ஆயிரம் ரூபாய்வழங்கவும் உத்தரவிட்டார்.