தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசி பிரியாணி கேட்டு கடை ஊழியர், உரிமையாளரைத் தாக்கிய இருவர் கைது. - Two arrested for assaulting Vaniyambady OC Biryani

வேலூர்: பணம் கொடுத்து பிரியாணியை வாங்குங்க எனக் கூறியதால் கடை ஊழியரையும், உரிமையாளரையும் தாக்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Two arrested for assaulting Vaniyambady OC Biryani
Two arrested for assaulting Vaniyambady OC Biryani

By

Published : Dec 12, 2019, 4:45 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் காஜா ஓட்டல் எனும் பிரியாணிகடை நடத்தி வருபவர் கலிம். கோனாமேடு பகுதியியைச் சேர்ந்தவர்கள் ஜெய்பாரத், செல்வபிரபு. இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்களாக உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் குடிபோதையில் சாப்பிடுவதற்கு காஜா ஓட்டலுக்கு சென்றனர்.

அப்போது, கடை ஊழியரிடம் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு ஊழியர் பணத்தை கொடுத்து பிரியாணியை பெற்று கொள்ளுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஊழியரையும். கலீமையும் பலமாகத் தாக்கினர்.

ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிசிடிவி

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து கலீம் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, தாக்குதல் நடத்திய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கந்தூரி விழாவில் 2,300 கிலோ கிராம் தடபுடலான பிரியாணி - மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details