தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்! - tamilnadu latest news

வேலூர்: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

By

Published : Feb 26, 2021, 3:18 PM IST

தமிழ்நாட்டில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று (பிப்.25) முதல் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை.

இதன் ஒரு பகுதியாக இன்று (பிப். 26) வேலூர் மாவட்டம் கிருஷ்ணா நகர் போக்குவரத்து பணிமனை முன்பு அதன் தொழிலாளர்கள் நாமம் போட்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'கோவிந்தா கோவிந்தா' என கோஷங்களை எழுப்பினர்.

மேலும் அரசு தங்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவில்லை. இதன் காரணமாக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் 25 சதவீத அரசு பேருந்துகளே இயக்கம்: மக்கள் கடும் அவதி!

ABOUT THE AUTHOR

...view details